சுழியம் ஒன்று என கணிப்பொறி மொழிப்பேசி
சொந்த தாய் மொழியை மறந்துப்போனேன்
சுற்றம் ஏதுமில்லா உலகில் வாழப்பழகி
சுய முகவரியென்பதை தொலைத்துவிட்டேன்
உறவுகள் அங்கே மகிழ்ந்திருக்க
இங்கே தனியாய் உணர்வுகளை அடக்கி
இயந்திரமாய் மாறிப்போனேன்.......
பணம் எனக்கு பிரதானமில்லை தான்
கிழிந்த சட்டையைத் தைத்துப்போடும்
தந்தை இல்லா விட்டால்
ஒண்டுக்குடித்தனத்தில் உழைத்து
ஓடாய்ப்போன தாயில்லாவிட்டால்
கண்ணில் கனவுகளோடு காத்திருக்கும்
சகோதர சகோதரி இல்லாவிட்டால்
பணம் என்றும் மகிழ்ச்சியைத் தடுக்காதிருக்க தான்
விழித்திருக்கும் உலகிற்காக
உறங்கிக்கொண்டிருக்கும் உலகத்தில்
உறங்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன்
வானவில்லாய் மாறப்போகும் என் பந்தங்களின்
நாளைய விடியலுக்காக.........
Saturday, December 26, 2009
Sunday, July 26, 2009
நம்பிக்கை
வண்டுகள் குடைவதால்
பூக்கள் வருந்துவதில்லை
தான் உதிர்ந்தாலும்
தன் இனம் உயிர்க்கும்
எனும் நம்பிக்கையில்.
பூக்கள் வருந்துவதில்லை
தான் உதிர்ந்தாலும்
தன் இனம் உயிர்க்கும்
எனும் நம்பிக்கையில்.
Thursday, May 28, 2009
காதல் பரிசு
நீ கொடுத்த பரிசு பொருளை சுற்றி வைத்த
காகிதத்தைக்கூட எறிவதற்கு என்னால் முடியவில்லை......
காகிதங்கூட நம் காதல் பேசியது......
அன்பே பத்திரப்படுத்திவிட்டேன்
உன்னையும் தான்.......
என் இதயத்துள்.
காகிதத்தைக்கூட எறிவதற்கு என்னால் முடியவில்லை......
காகிதங்கூட நம் காதல் பேசியது......
அன்பே பத்திரப்படுத்திவிட்டேன்
உன்னையும் தான்.......
என் இதயத்துள்.
Thursday, April 16, 2009
என் காதலே
என் காதலே.....
நீ தந்த முதல் முத்தத்திலோ....
எனை தீண்டிய மலர் ஸ்பரிசத்திலோ....
எனை தொலைக்கவில்லை
எதிர்ப்பார்ப்பில்லா உன் அன்பிலே
அந்த நேசத்திலே.........
கரைந்தே போனேன்
உன்னிடத்தில் நான்.
நீ தந்த முதல் முத்தத்திலோ....
எனை தீண்டிய மலர் ஸ்பரிசத்திலோ....
எனை தொலைக்கவில்லை
எதிர்ப்பார்ப்பில்லா உன் அன்பிலே
அந்த நேசத்திலே.........
கரைந்தே போனேன்
உன்னிடத்தில் நான்.
Subscribe to:
Posts (Atom)