Thursday, August 28, 2008

நீயின்றி வேறில்லை தாயே

உன் கருவறைக்குள் எட்டி உதைத்தேன்,
வலித்தாலும் நேசித்தாய்!
உன் கருவிழிக்குள் என்னை வைத்தாய்,
இமைபொழுதும் பிரியாதிருப்பதர்க்காய்!
உன் விருப்பங்கள் ஏதும் நானறியேன்,
எனதுள்ளம் நீ அறிவாய்!
இந்த உலகம்,உன் விரல் வழி பார்த்தது!
எனது உலகமும் தெய்வமும்,
நீயின்றி வேறில்லை தாயே!

Wednesday, August 27, 2008

ஒரு தலை காதல்

உனக்கு என்ன பிடிக்குமென்று கேட்டபொழுது
கேட்காமல் விட்டேன்,
உனக்கு என்னை பிடிக்குமா? என்று.

Monday, August 25, 2008

நட்பூ

அன்றே மலர்ந்து அன்றே உதிரும்
மலருக்குத் தெரியாது
நமக்குள் பூத்தது மலர்ந்தேயிருக்கும்
"நட்பூ" என்று.

Wednesday, August 20, 2008

தோல்வியின் வெற்றிகள்

அசைந்தாடி தடுமாறி வீழ்ந்தெழுந்து நடை பழகையில்
ஒவ்வொரு தோல்வியும் படிக்கட்டுகளாக மாறியது ,அன்று
வேலைத் தேடி படியேறி காத்திருந்து தோல்வியை சந்தித்து
நடைபாதையில் நடக்கையில் ஏனோ மனம் மறுக்கிறது
"தோல்வியே வெற்றியின் படிக்கட்டுகளென்று", இன்று.

Saturday, August 16, 2008

உன்னால் முடியும்

முயலாதவன் நவில்கின்றான்..........
கும்பிட்ட தெய்வம் துணையில்லை
நின்றிட்ட திசை சரியில்லை
தொடங்கிய நேரம் விளங்கவில்லை
சொல்லத்துடிக்கிறேன்...................
இவையெல்லாம் வெற்றி தரும்
நண்பா நீ முயன்றால்
உன் மேல் நம்பிக்கையுடன்.

Thursday, August 14, 2008

மழை

மேளதாளமாய் இடி முழங்க

அலங்கார விளக்காய் மின்னல் சிரிக்க

மேக காதலன் பூமி காதலியை

தேன் துளியாம் மழை துளியால்

ஸ்பரிசிக்கின்றான் காதலுடன்
!

காதலுடன்!

ஒருமுறையேனும்

உன்னை பார்த்திட

துடிக்கிறேன்

இன்றும்

என்னை ஏமாற்றி ஒளிர்கின்றாய்

நிலவே

காதலுடன்

சூரியன்

..............

Wednesday, August 13, 2008

கனவு மெய்ப்படுமா?

நல்வரவை எதிர் நோக்கி முடிவில்லா சாலையில் பயணிக்கிறேன்

முடித்து வைத்த கனவுகளோடு.............

கரைந்திடும் நிமிடங்கள்,கரைத்திடுமா கனவுகளை?

நம்பிக்கைதான் கைவிடுமோ?