Sunday, January 31, 2010

ஆதவன்

பன்னிரெண்டு மணி நேரப் பிரசவப்போராட்டம்
ஆர்ப்பரிக்கும் கைகளால் எல்லா தெய்வங்களையும்
வேண்டி நின்றாள் கடல் அன்னை
காலை 6.15 மணியளவில் நடந்தது சுகப்பிரசவம்
சிவந்த முகத்தான்,உலகாளப்பிறந்தவன்
சூரியன் எனும் நாமம் தறித்தவன் தான்
ஆயிரமாயிரம் ஒளிக்கரங்களோடு அவதரித்தான்.....