Saturday, April 2, 2011

போதும்!

ஆகாயத்திலிருந்து குதித்துவர வேண்டாம்...
அன்பை குறிப்பாய் உணர்த்தினால் போதும்...
எனக்காக யுத்தம் செய்ய வேண்டாம்...
என்னை விட்டுக் கொடுக்காதிருந்தால் போதும்...

பொய்யாய் புகழ வேண்டாம்...
மெய்யாய் பழகினால் போதும்...
மாட மாளிகை வேண்டாம்...
கூரை வீடானாலும் போதும்....

மகிழ்விக்க பரிசுப்பொருட்கள் தர வேண்டாம்...
துயரந்தாங்க தோள்சாய அனுமதித்தால் போதும்...
நீ நான் என்னும் ஒருமை வேண்டாம்...
நாம் என்னும் ஒற்றுமை போதும்....

வேண்டும் வேண்டாம்
ஏதாகினும் சொல்லிவிட்டால் போதும்...