Monday, June 13, 2011

நட்பென்னும் உலகத்திலே!

நாமாய் உருவாக்கிக் கொள்ளும் பந்தமிது...
எதிர்பார்பில்லை ஒப்பீடில்லை ஏற்றத்தாழ்வில்லை
நமக்குள் பேதமேதுமில்லை;
நெஞ்சார்ந்த அன்பு மட்டுமுண்டு அளவில்லாமல்
புதிதாய் உணர்ந்தோம் நட்பென்னும் உலகத்திலே!

மகிழ்ச்சியில் தெறிவோமோ அறியோம்
துயரத்தில் பங்கெடுப்போம்
தோள் கொடுக்கும் தோழராய் அல்ல
உயிர் கொடுக்கும் தோழராய்...

இது உன்னது அது என்னது
பிரித்ததுப் பார்த்தில்லை என்றும்...
சின்ன சண்டைகள் உண்டு நம்மிடம்
பிரிவதற்க்காக அல்ல
சமரசமாய் விட்டுக்கொடுப்பதற்க்கு...

தவறுகள் செய்வோம் பின்
அதை உணரவும் செய்வோம்...
தட்டிக் கேட்கவும் செய்வோம்
தட்டிக் கொடுக்கவும் செய்வோம்...

பொய் ஏதும் சொல்லாமல்
முகமூடி ஏதும் இல்லாமல்
மனதில் பட்டதை பட்டென
சொல்லவும் முடியும் சொல்லாத
பல படிக்கவும் முடியும்...

நாம் நாமாய் உணர்வோம்
நட்பென்னும் உலகத்திலே!

Tuesday, June 7, 2011

யாசகம்!

என் தனிமைப் பொழுதும்
உன் பிரிவின் துயரும்
விடாது துரத்திடும் உன் நினைவுகளும்
மனதில் குடிகொள்ளும் வெறுமைத் உணர்வும்
விழியோரம் கசிந்திடும் கண்ணீர் துளியும்
நீ இல்லாத என் உலகின் பிம்பமாகின...

உன்னை நேசிக்கிறேன் என்றும் யாசிக்கிறேன்
என்னை மன்னிப்பாயா உடன் சேர்வாயா?
தொலைந்துவிட்ட என்னைத் தேடித் தருவாயா?