Tuesday, June 7, 2011

யாசகம்!

என் தனிமைப் பொழுதும்
உன் பிரிவின் துயரும்
விடாது துரத்திடும் உன் நினைவுகளும்
மனதில் குடிகொள்ளும் வெறுமைத் உணர்வும்
விழியோரம் கசிந்திடும் கண்ணீர் துளியும்
நீ இல்லாத என் உலகின் பிம்பமாகின...

உன்னை நேசிக்கிறேன் என்றும் யாசிக்கிறேன்
என்னை மன்னிப்பாயா உடன் சேர்வாயா?
தொலைந்துவிட்ட என்னைத் தேடித் தருவாயா?