Tuesday, July 20, 2010

முத்தழகி

மின்னல் வழி உனைத்தேடினேன்
இடியோசை எழுப்பி உனை அழைத்தேன்
தானே உருகி மழையாய் வந்தேன்
உன்னைப் பார்க்கவே தவியாய்த் தவித்தேன்
உன்னைக் கண்டேன் காதல் கொண்டேன்
உன் அன்பகத்துள் உறையுள் செய்தேன்
உன்னால் ஒப்பில்லா அழகிய
வெண்முத்துமானேன்.....
காதலே என் கடல் சிப்பியே
கைமாறாய் என்செய்வேன்...

படைப்பு

ஒளியை உணர கண்கள் படைத்தான்
கண்கள் உறங்க இரவைப் படைத்தான்
இரவில் உறங்காமல் தவிக்க
உன் நினைவைப் படைத்தான்...

Monday, July 12, 2010

நித்தம் அழைப்பாயா?

உன் அழைப்புக்காக கைப்பேசியை
நித்தம் பார்த்தவள்.....
இப்பதான் உன்னை நினைச்சேன்னு
பதறாமல் பொய் சொன்னேன்.....
என்றாவது ஒரு நாள் நீ அழைக்கையில்.....