Tuesday, July 20, 2010

முத்தழகி

மின்னல் வழி உனைத்தேடினேன்
இடியோசை எழுப்பி உனை அழைத்தேன்
தானே உருகி மழையாய் வந்தேன்
உன்னைப் பார்க்கவே தவியாய்த் தவித்தேன்
உன்னைக் கண்டேன் காதல் கொண்டேன்
உன் அன்பகத்துள் உறையுள் செய்தேன்
உன்னால் ஒப்பில்லா அழகிய
வெண்முத்துமானேன்.....
காதலே என் கடல் சிப்பியே
கைமாறாய் என்செய்வேன்...

No comments: