Sunday, June 13, 2010

மரம்..மரணம்...மறுபிறப்பு....

பட்ட மரமென்று என்னை எண்ணாதே
இலையுதிர் காலம்தான் இது
என் அந்திமாக்காலம் அல்ல...

மீண்டும் கிளையனைத்தும் இலை பறப்புவேன்
கனு அனைத்திலும் பூக்கள் மலர்விப்பேன்
பசுமையின் இருப்பிடமாவேன்...

தென்றல் காற்றில் அசைந்தாடுவேன்
புயல் காற்றிலும் வேருன்றி நிற்ப்பேன்
சுவாசக்காற்றும் நல்நிழலும் தருவேன்...

காலங்கள் மாறலாம் நான் கொண்ட கோலங்கள் மாறலாம்
காலத்தின் எல்லைத்தாண்டி நம்பிக்கைக்கதை சொல்வேன்
காலம் வென்ற விருட்சமாவேன்...

கோடாரி கொண்டு எனை வீழ்த்தாமல் இன்று மட்டும்
என் வேர்கட்கு தண்ணீர் கொடு...

இப்படிக்கு
வாழ்க்கைப் போராட்டத்தில் சாலையோரப்பூங்கா மரம்.....