அம்மா அன்பையும் நேர்மையும் கற்றுத்தந்தாள்
நீயோ வீரத்தையும் விவேகத்தையும் கற்றுத்தந்தாய்
கடும் உழைப்புக்கு உதாரணம் நீ...
என் முதலெழுத்துமானவன் நீ...
தலைவனவன் நீ...
கடன் பட்டு வாழ்கையில் அடிபட்டு
குடும்பத்திற்காக அனைத்தும் இழந்து நின்றாய்
சுயநலமாய் சிந்தித்தேன்
புரியாது உன்னை வெறுத்தேன்
கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்தேன்
வலித்தாலும் நேசித்தாய்
சிறு பெண்ணென்று கருதாது புரியவைத்தாய்...
பெண்ணென்று ஒடுக்கவில்லை என்னை
சிறகுகள் கொடுத்தாய் பரிசாய்...
கூண்டுச் சிறைக்குள் வைக்கவில்லை என்னை
சுதந்திரமாய் செயல்பட ஊக்கமும் தந்தாய்...
என் கனவுகளுக்கு வண்ணம் சேர்த்தாய்...
பத்து வயதில் உன்னை நண்பர்களிடம் என் HEROவென்று காண்பித்தேன்...
பருவ வயதில் உன்னை எதிர்த்து நிற்க்கவே துடித்தேன்...
இன்றோ இளைத்த உன் தோள்கட்க்கு வலுசேர்க்க விரைந்தேன்...
நீ ஓய்வெடுக்கும் காலம் வரும்...
உன்னோடு பக்கபலமாய் நான் வருவேன்
என்றென்றும்...
நீயோ வீரத்தையும் விவேகத்தையும் கற்றுத்தந்தாய்
கடும் உழைப்புக்கு உதாரணம் நீ...
என் முதலெழுத்துமானவன் நீ...
தலைவனவன் நீ...
கடன் பட்டு வாழ்கையில் அடிபட்டு
குடும்பத்திற்காக அனைத்தும் இழந்து நின்றாய்
சுயநலமாய் சிந்தித்தேன்
புரியாது உன்னை வெறுத்தேன்
கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்தேன்
வலித்தாலும் நேசித்தாய்
சிறு பெண்ணென்று கருதாது புரியவைத்தாய்...
பெண்ணென்று ஒடுக்கவில்லை என்னை
சிறகுகள் கொடுத்தாய் பரிசாய்...
கூண்டுச் சிறைக்குள் வைக்கவில்லை என்னை
சுதந்திரமாய் செயல்பட ஊக்கமும் தந்தாய்...
என் கனவுகளுக்கு வண்ணம் சேர்த்தாய்...
பத்து வயதில் உன்னை நண்பர்களிடம் என் HEROவென்று காண்பித்தேன்...
பருவ வயதில் உன்னை எதிர்த்து நிற்க்கவே துடித்தேன்...
இன்றோ இளைத்த உன் தோள்கட்க்கு வலுசேர்க்க விரைந்தேன்...
நீ ஓய்வெடுக்கும் காலம் வரும்...
உன்னோடு பக்கபலமாய் நான் வருவேன்
என்றென்றும்...