Thursday, August 28, 2008

நீயின்றி வேறில்லை தாயே

உன் கருவறைக்குள் எட்டி உதைத்தேன்,
வலித்தாலும் நேசித்தாய்!
உன் கருவிழிக்குள் என்னை வைத்தாய்,
இமைபொழுதும் பிரியாதிருப்பதர்க்காய்!
உன் விருப்பங்கள் ஏதும் நானறியேன்,
எனதுள்ளம் நீ அறிவாய்!
இந்த உலகம்,உன் விரல் வழி பார்த்தது!
எனது உலகமும் தெய்வமும்,
நீயின்றி வேறில்லை தாயே!

No comments: