Tuesday, July 31, 2012

சண்டைக் கோழி!

காரணமின்றி சண்டையிடுவது
உன்னைப் புரியாது பிரிவதற்க்கு அல்ல...
நீ என்னைப் புரிந்து கொள்வாய் என்பதால்!

Saturday, July 21, 2012

குறையொன்றும் இல்லை

பொய் இல்லை
பொறாமை இல்லை
எதிர்பார்ப்பு இல்லை
எரிச்சல் இல்லை
சந்தேக‌ம் இல்லை
கோபம் இல்லை
இல்லை என்ப‌து ஏதுமில்லை...
ம‌ன‌தில் அன்பை நிறைவாய் கொண்ட‌போது!

Friday, July 20, 2012

ப‌ண்பா? பணமா?

என்னோடு படித்தவன் இன்று
என்னைவிட நன்றாயிருக்கிறான் பொருளாதரத்தில்...
பண்போடு பாராட்டவா? ப‌ண‌த்தோடு போராட‌வா?

நானும் வைத்துள்ளேன் அவனும் வைத்துள்ளான்...
அவனிடம்
சந்தையில் புதுரகமாய் விலை உயர்ந்தாய்...
பண்போடு இரசிக்கவா? பொருள்மீது ஆசைகொள்ளவா?

நாக‌ரீக‌மெனும் பெய‌ரில்
ஒவ்வாத ப‌ல‌தை ஏற்றுக்கொண்டேன்
கூடாத ஆ‍- மைக‌ளில் ஒப்புமையும் சேர்த்துக்கொண்டேன்

ப‌ண‌ம்தேடி பொருள்தேடி ஒடுகின்றேன்
இருப்ப‌தை ம‌றந்து சொந்த‌ங்க‌ள் தொலைத்து
இல்லாத‌ இன்ப‌ம் தேடி...
ஜெப்பது யாரோ?

Monday, June 11, 2012

இரகசியம்!

கழுத்தோடு கட்டிக்கொண்டு
காதோரம் காத‌ல் பேசி
எப்போதும் நீ இருக்க வேண்டும் என்பேன்!

சில‌ நாட்களில் வ‌ந்திடுவேன்
பிரியாம‌ல் பிரிந்து வந்தேன்
கழுத்தோடு உன் துப்பட்டாவை சுத்திக்கொண்டு!

Tuesday, September 20, 2011

நெருக்கம்!

நீ பிரிந்திருப்பதால் வருத்தமில்லை...
நிஜத்தில் இல்லா நெருக்கத்தை
நினைவில் இருத்தி மகிழ்ந்திடுவேன்...

Tuesday, July 12, 2011

படைத்தவனா? படைக்கப்பட்டவனா?

எங்கும் இருப்பான் இறைவன்....
அவன்மட்டும் தானா?
எங்கும் இருக்கிறாய் நீ...
என்னைப் படைத்தவனா?
எனக்காக படைக்கப்பட்டவனா?

Monday, June 13, 2011

நட்பென்னும் உலகத்திலே!

நாமாய் உருவாக்கிக் கொள்ளும் பந்தமிது...
எதிர்பார்பில்லை ஒப்பீடில்லை ஏற்றத்தாழ்வில்லை
நமக்குள் பேதமேதுமில்லை;
நெஞ்சார்ந்த அன்பு மட்டுமுண்டு அளவில்லாமல்
புதிதாய் உணர்ந்தோம் நட்பென்னும் உலகத்திலே!

மகிழ்ச்சியில் தெறிவோமோ அறியோம்
துயரத்தில் பங்கெடுப்போம்
தோள் கொடுக்கும் தோழராய் அல்ல
உயிர் கொடுக்கும் தோழராய்...

இது உன்னது அது என்னது
பிரித்ததுப் பார்த்தில்லை என்றும்...
சின்ன சண்டைகள் உண்டு நம்மிடம்
பிரிவதற்க்காக அல்ல
சமரசமாய் விட்டுக்கொடுப்பதற்க்கு...

தவறுகள் செய்வோம் பின்
அதை உணரவும் செய்வோம்...
தட்டிக் கேட்கவும் செய்வோம்
தட்டிக் கொடுக்கவும் செய்வோம்...

பொய் ஏதும் சொல்லாமல்
முகமூடி ஏதும் இல்லாமல்
மனதில் பட்டதை பட்டென
சொல்லவும் முடியும் சொல்லாத
பல படிக்கவும் முடியும்...

நாம் நாமாய் உணர்வோம்
நட்பென்னும் உலகத்திலே!