Saturday, November 1, 2008

இனியவளே!

வண்டுக்காக பூத்திருக்கும் மலராக
வான்மழைக்காக காத்துக்கிடக்கும் மண்ணாக
தன்மேல் விழும் ஒளியின்
வண்ணம் பிரதிபளிக்கும் தண்ணீராக
உன் விழியின் ஓரப்பார்வைக்காக
பரிதவிப்போடு காத்திருக்கிறேன் நான்.............
உன் பூவிதழ் அசைய வேண்டாம்
மௌன மொழி பேசும்
உன் விழி அசைந்தால் போதும்
தனிமையில் தவிக்கிறேன்
மௌனம் கலைப்பாயா?
என் இனியவளே!

No comments: