Sunday, March 7, 2010

யார் அவள்?

வண்ண ஆடை உடுத்தியிருந்தாள்
புத்தாடையாயை அல்ல கந்தலாய்
கூந்தல் கட்டவில்லை
அலங்காரமாய் அல்ல அலங்கோலமாய்
எல்லோரிடமும் போய் உறவாடுகிறாள்
உறவுக்காக அல்ல உணவுக்காக
அவளுக்கு இது வாடிக்கையா?
பலருக்கு இது வேடிக்கையா?
எனக்கு இது வேதனையா?
மனமும் எண்ணமும் என்னுள்
பேச்சுவார்த்தையிலிறங்க.....
பசியிடம் தோற்றிற்ற வேதனையில்
அங்கே அவள்..........
கடைசியில் என்னருகில் வருகிறாள்
" சாப்பிட ஏதாச்சும் வாங்கி தா அக்கா" என்று
இவள்
எதிர்கால இந்தியாவின் கலங்கரை விளக்கமா?
இல்லை கலங்கும் கண்ணீரா?
இவளா அவள்?

No comments: