அம்மா சுட்டுத் தரும் அதிரசமும் முருக்கும்
அப்பா வாங்கி தரும் புத்தாடையும்
அண்ணன் தரும் பேனாவும் பென்சிலும்
அஞ்சு பைசா மிட்டாய் வாங்கி பத்து நூறு தரும் உறவினரும்
என்னிக்கும் இல்லாம அன்னிக்கு மட்டும் எல்லோரும் எனை பார்த்து சிரிச்சு பேசுறதும்
என் சோட்டு பெண்டுகளெல்லாம் கூடி வாழ்த்து படிச்சதும்
அழகா இருக்க புள்ளனு சொல்லிபுட்டு தள்ளி நிக்குற என் வகுப்பு பயலுகளும்
எனக்கு தந்தது காலத்தால அழியாத நினைவுப் பரிசு
அது பிறந்தநாள் பரிசு!
1 comment:
Hey bams.. Nalla kavithai.. Romba naal ukanthu yosichiyo????
Post a Comment