Friday, September 17, 2010

தோழி!

என் தோழி விடை பெறுகிறாள்...
வாழ்வின் வேறு தளத்திற்கு செல்கிறாள்...
சிரித்து அனுப்பிவிட்டேன் நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு...

ஒன்றாய் வாழ்ந்த நாட்களை எண்ணி உரையாட நேரமில்லை...
அவளுக்காக வாங்கிய பரிசைக் கொடுக்க கைகளுக்கும் வலுவில்லை...
மறுமுறை சந்திக்க தருணமேற்படுத்தும் என்பதால் கொடுக்கவுமில்லை...

கலைத்து போட எங்கள் இல்லத்தின் குழந்தை அவள்...
சண்டை போட எங்கள் பாகிஸ்தான் அவள்...
உரிமை கோர எங்கள் காஷ்மீர் அவள்...

ஒரு தட்டில் சோறு உண்டதைச் சொல்வேனா?
மடி சாய்ந்து கதை பேசி மகிழ்ந்ததைச் சொல்வேனா?
பட்டபெயர் பல வைத்து அழைத்து சிரித்ததைச் சொல்வேனா?

முட்டிக் கொண்டதைச் சொல்வேனா?
பிறகு கட்டிக் கொண்டதைச் சொல்வேனா?
புதியதொரு பாதையில் தனித்தனியே பயணிக்கின்றோம்...

அடி தோழி! நட்பெனும் பந்தம் கொண்டோம்!
இம்மையிலும் மறுமையிலும் பிரியாதிருப்போம் என்றோம்!
அப்படியே வாழ்ந்தும் மறைவோம்!

11 comments:

bams said...

GG this is for you :)

monica said...

kaa sooper....rmmbrin all dos moments spent n hostel ka....

Dinu said...

nice :)

Lakshmikandh said...

very nice akka......

sanjeevkumar said...

arumai:-)

Unknown said...

GG loves u always..:)keep on posting ur innovative kavithai

kameswaran said...

நவயுக கர்ணனின் (என்னுடைய) பாராட்டுகளும் பரிசுகளும் உன் தோழிக்கு...

இடைவிடாது தூருவாய் உன் கவிதுளிகளை .....

என்றும் அன்புடன்..
காமேஸ்வரன் :)

Unknown said...

Very nice dear.. & Miss you too bama.. Our 2 yrs school life ever memorable

bams said...

hey dhivi...
thanks dear...

Thiru (Born for Networking) said...

akka... kavithai kavithai... write more!!!!

Unknown said...

Thanks Bams....Love you dear....