Thursday, February 3, 2011

ஆசை!

உண்மை மட்டுமே பேசித் திரிஞ்சேனே..
பொய் பேசவும் கத்துகிட்டேனே...
 மனசுக்குள்ள ஒளிச்சுவச்ச ஆசையெல்லாம்
ஒன்னொன்னா வெளிவருமே...
கனவுக்குள்ள பூட்டிவச்சேனே
கள்ளச்சாவி கொண்டு வந்தீகளோ?

தனியா இருக்கையில உன் தோள் சாய ஆசை
துணையா இருக்கையில இருகக் கைப் பிடிக்க ஆசை
நடந்து போகையில உன் பின்னால நடக்க ஆசை
இருந்து சரிசமமா நீ, உன் கூட நடத்திவர ஆசை

தெரிந்தும் தெரியாதது போல காட்டிகிட ஆசை
அறிந்தும் அறியாதது போல நீ நடந்துகிட ஆசை
உன் முகக் குறிப்பு நான் மட்டும் புறிஞ்சுகிட ஆசை
என் கண் அசைவை நீ மட்டும் தெறிஞ்சுகிட ஆசை

தொங்க தொங்க தாலி கட்டிகிட ஆசை
நம்மைப் போல பிள்ளை இரெண்டு பெத்துகிட ஆசை
நடை தளர்ந்து பார்வை மங்கி நரை கூடிப்போன பின்னாலும்
உனக்கு நான் எனக்கு நீயின்னு வாழ்ந்து மறைந்திட ஆசை

என் குலசாமி உன்னை கண்ணு முன்ன நிறுத்த வேணுமின்னு ஆசை!

2 comments:

sanjeevkumar said...

un aasaigal niraivera,en vaazhthukkal.....nalaruku :-)

Unknown said...

Super dear...rmb ah nala eruku..
un aasaihalai niraivetha un hero unai thedi varuvan....kathiru mahalae...